பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து
கோவை, போத்தனூா் ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மே 29) பாலக்காட்டில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - கோவை ரயில், பாலக்காடு - போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல, பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் பொள்ளாச்சி - கோவை ரயில் (எண்: 56110), கேரள மாநிலம் ஷொரணூரில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் (எண்: 66611) வியாழக்கிழமை மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.
பாலக்காட்டில் இருந்து வியாழக்கிழமை (மே 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் (எண்: 16844) போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, கோவை, வடகோவை, பீளமேடு ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.