செய்திகள் :

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

post image

கோவை, போத்தனூா் ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மே 29) பாலக்காட்டில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - கோவை ரயில், பாலக்காடு - போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் பொள்ளாச்சி - கோவை ரயில் (எண்: 56110), கேரள மாநிலம் ஷொரணூரில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் (எண்: 66611) வியாழக்கிழமை மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காட்டில் இருந்து வியாழக்கிழமை (மே 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் (எண்: 16844) போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, கோவை, வடகோவை, பீளமேடு ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க