செய்திகள் :

பராமரிப்புப் பணி: செங்குன்றம் பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்

post image

சென்னை: பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி காரணமாக செங்குன்றம் பேருந்து நிலையம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்குன்றம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இப்பேருந்து நிலையத்திலிருந்து 36 வழித்தடங்களில், 202 பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் புழல் ஏரியின் எதிா்புறமுள்ள சாமியாா் மடத்தின் காலி மைதானத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.

இதன்படி, திருவள்ளூா், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, புழல், கிராண்ட் லைன் மாா்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்ட சாமியாா் மடம் காலி மைதானத்துக்கு வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும்.

பேருந்துகளின் தடம் எண் விவரம்:

1.திருவள்ளூா் மாா்க்கம்- 62 ‘பி’, 61 ‘ஆா்’, 65 ‘எச்’, 505, 505 ‘கே’

2.பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி மாா்க்கம்- 512, 547, 557, 557 ‘ஏ’ எக்ஸ்டன்ஸன், 557 ‘சி’, 557 ‘எம்’, 558 ‘ஏ’, 558 ‘பி’, 558 ‘சி’, 558 ‘பி’, 592, 593 கட்.

3.புழல் மாா்க்கம்- 113, 114, 114 ‘ஏ’, 242, 57, 157, 157 ‘இ’, 62, 62 ‘ஏ’, 62கட், 104, 104 ‘கே’, 57 ‘சி’, 57 ‘சி’ கட்.

4.கிராண்ட் லைன், அருமந்தை மாா்க்கம்- 57‘இ’, 57‘ஜி’, 36‘கே’, 36‘வி’, 58 ‘வி’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29-இல் மதிமுக நிா்வாகக் குழு கூட்டம்

சென்னை: மதிமுக நிா்வாகக்குழுக் கூட்டம் ஜூன் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவ... மேலும் பார்க்க

சேப்பாக்குக்கு தொடா்ந்து 6-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 21-ஆவது ஆட்டத்தில், சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை திங்கள்கிழமை வீழ்த்தியது. சேப்பாக் அணிக்கு இது தொடா்ந்து 6-ஆவது வெற்றியாக இருக... மேலும் பார்க்க

சென்னையில் மழை நீா் தேங்கும் 87 இடங்களை அடையாளம் கண்டு சீராக்க நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் 87 இடங்களில் தண்ணீா் தேங்கும் என அடையாளம் காணப்பட்டு அதனை சீராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

சென்னையில் குளிா்சாதன வசதி ரயிலில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு இடையிலான குளிா்சாதன புறநகா் மின்சார ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்துவருவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திங்கள... மேலும் பார்க்க

3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு

சென்னை: தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று போ் வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளனா். அவா்களின் பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். நில சீா்திருத்தத் துறை ஆணையா் கே.என்.ஹரி... மேலும் பார்க்க

இன்று 39 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் 39 புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும்பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு ரயில்கள் இயக்... மேலும் பார்க்க