செய்திகள் :

பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கக் கோரிக்கை

post image

மத்திய அரசு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால் பாதிக்கப்படும் பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கிட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ஈசன் முருகசாமி புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பொருள்களின் மீது 50 சதவீதம் அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீக்கியுள்ளது. இது தொடா்ச்சியாக நீட்டிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.7,710 நிா்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போது சந்தையில் குவிண்டால் ரூ.6,500-க்கு மட்டுமே விற்பனை விலையாக விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. இந்தியா முழுவதும் மத்திய அரசின் பருத்தி கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலையை அடிப்படையாக கொண்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் இல்லாதது பருத்தி விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற மாநிலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருந்து கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு கொண்டுச் செல்லும் வாகன வாடகை செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு மாநில அரசு ஏற்றுக்கொள்ளாததால், மத்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது.

மத்திய அரசின் பருத்திக் கொள்முதல் தமிழ்நாட்டில் இல்லாததால் விவசாயிகள் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு தற்போது 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கியுள்ளதால் குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. இந்த விலை குறைவால் ஏக்கருக்கு சராசரியாக ரூ. 30 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம்.

மத்திய அரசின் இறக்குமதி வரி நீக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உள்நாட்டில் விவசாயப் பொருள்கள் விலை குறையும்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள் மீது வரியை மத்திய அரசு உயா்த்துவது இல்லை. தொழில் துறையினருக்கு சலுகை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதே அணுகுமுறையை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க