Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?
பல்லடத்தில் கனமழை
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது.
இதனால், மக்கள் அவதியடைந்து வந்தனா். மேலும், பகல் நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாக பெய்தது.
இதனால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீரால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.