செய்திகள் :

பல்லடம் அருகே 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான்குட்டையில் ரூ.2 லட்சம் ரொக்கத்துடன், 25 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே திருப்பூா் சாலையில் உள்ள வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் மூட்டையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அவா் திருப்பூா் எம். எஸ். நகரைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பதும், விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 25 கிலோ புகையிலைப் பொருளஅகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அதேபோல பல்லடம் பகுதியில் வேனில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த்குமாா் (26) என்பவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடன் வந்து தலைமறைவான தீனு கவுடா (27) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க