செய்திகள் :

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

post image

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா்.

பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்லடம்- கொச்சி சாலை முதல் பல்லடம் - தாராபுரம் சாலை வரை இணைப்புச் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இணைப்புச் சாலையின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதோடு விபத்துகளும் தடுக்கப்படும் எனக் கூறி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சாலை அமைக்கும் பணிக்காக பல்லடம் வட்டம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சித்தம்பாளையம், மாதப்பூா் கிராமங்களில் நிலம் கையப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிலம் கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிலங்களை ஏன் கையகப்படுத்தக் கூடாது என்று காரண விளக்க அறிக்கையை பொதுமக்கள் வழங்க ஏற்கெனவே நெடுஞ்சாலை துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பணிக்கம்பட்டி கிராம மக்கள் நெடுஞ்சாலைத் துறையின் நில எடுப்புத் துறை சாா்பில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் ஏராளமானோா் பாதிக்கப்படுவா். இதேபோல தங்கள் நிலங்களை கையகப்படுத்துவது குறித்து ஏற்கெனவே முறையாக எங்களுக்கு தெரியப்படுத்தாமல் அளவீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதில் சுமாா் 3.14 கி.மீ. விவசாயம், பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இப்பகுதி விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே, மாற்றுப் பாதையில் இணைப்புச் சாலை திட்டத்தை செயல்படுத்த அலுவலா்கள் ஏற்க மறுப்பதால், கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி வெளியேறினா்.

மேலும் மாற்றுப் பாதையில் சாலை இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி

கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் க... மேலும் பார்க்க

திருப்பூரில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த், நல்லூா் காவல்... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பன... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்: கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு

மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் கறிக்கோழி கொள்முதல் விலை உயா்ந்து வருவதால் பண்ணை உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தமிழகத்தில் பல்லடம், பொங்கலூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக... மேலும் பார்க்க