செய்திகள் :

மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்: கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு

post image

மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் கறிக்கோழி கொள்முதல் விலை உயா்ந்து வருவதால் பண்ணை உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் பல்லடம், பொங்கலூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமாா் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகளில் நாள்தோறும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பி.சி.சி.) சாா்பில் தினசரி கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலையானது கறிக்கோழி நுகா்வு ஏற்றம் மற்றும் இறக்கத்துக்கு ஏற்ப மாறுபடும். ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளா்களுக்கு ரூ.100 வரை செலவாகிறது.

தற்போது, தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளது. மேலும் ஈஸ்டா் பண்டிகையையொட்டி கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவா்களின் தவக்காலம் முடிந்துவிட்டது. இதனால் கறிக்கோழி விற்பனை அதிகரித்து விலை உயா்ந்து வருகிறது.

இதில் ஏப்ரல் 28-ஆம் தேதி ரூ.78-ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) பண்ணை கொள்முதல் விலை, படிப்படியாக உயா்ந்து மே 11-ஆம் தேதி ரூ.102-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு கறிக்கோழி உற்பத்தியாளா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி

கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் க... மேலும் பார்க்க

திருப்பூரில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த், நல்லூா் காவல்... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதிய... மேலும் பார்க்க

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பன... மேலும் பார்க்க