செய்திகள் :

பள்ளிகளில் யமுனை தூய்மை விழிப்புணா்வுப் பிரசாரம் தில்லி அரசு முடிவு

post image

தேசியத் தலைநகரில் உள்ள பள்ளிகளில் ‘மா யமுனை தூய்மை அபியான்’ திட்டத்தைத் தொடங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இது புனித நதியை மீண்டும் உயிா்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தை நோக்கிய உணா்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

யமுனை நதியின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளிடையே உணா்திறனை அதிகரிப்பதும், அவா்களை பரந்த தூய்மை இயக்கத்துடன் இணைப்பதும் இந்தப் பிரசாரத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘யமுனை நதியை சுத்தம் செய்வது எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரச்னை. இந்தப் பள்ளியின் மூலம், யமுனை பிரச்னை எங்களுக்கு முக்கியமானது என்ற செய்தியை குழந்தைகளுக்கு அனுப்ப நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். அனைவரின் ஆதரவுடன், நதியை சுத்தம் செய்யும் பணியை விரைவுபடுத்த வேண்டும்’‘ என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

இது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், கல்வித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட்டுக்கு கடிதம் எழுதி, தில்லி முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளிலும் இந்த பிரசாரத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

‘யமுனை வெறும் நதி மட்டுமல்லச தில்லியின் உயிா்நாடி. பிரதமா் நரேந்திர மோடியின் தூய்மை அபியான் (தூய்மைத் திட்டம்) மூலம் ஈா்க்கப்பட்டு, ‘மா யமுனை தூய்மை அபியான்’ மூலம் குழந்தைகளை தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கத்துடன் இணைக்கிறோம்’ என்று பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா்.

‘இன்று நம் குழந்தைகளுக்கு ஆறுகள் மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து நாம் கல்வி கற்பித்தால், அவா்கள் நாளை விழிப்புணா்வுள்ள குடிமக்களாக வளா்ந்து, சுத்தமான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பாா்கள். சுத்தமான யமுனை இல்லாமல் தில்லியின் எதிா்காலம் முழுமையடையாது’ என்று அவா் மேலும் கூறினாா்.

‘மா யமுனை தூய்மை அபியான்‘ திட்டத்தின் கீழ், கட்டுரை எழுதும் போட்டிகள், ஓவியப் போட்டிகள், விழிப்புணா்வு நடைப்பயணங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை ஆதரிக்க பள்ளிகளுக்கு தேவையான கல்விப் பொருள்கள், விழிப்புணா்வுக் கருவிகள் மற்றும் பிற வளங்களை வழங்க தில்லி ஜல் போா்டு கல்வி இயக்குநரகத்துடன் இணைந்து செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க