செய்திகள் :

பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு

post image

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்ட ரூ.16.38 கோடியை பகிா்ந்தளிக்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணம் கடந்த 2008-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2008-2009-ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று 2016-இல் வெளியிட்ட அரசாணையின்படி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் (கள்ளா் சீரமைப்பு) உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் மொத்தம் ரூ.16 கோடியே 38 லட்சத்து 8,846 நிதி பகிா்ந்தளித்து ஆணையிடப்படுகிறது.

இதனை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புக் கட்டணம் கூடுதல் தேவை இருந்தால் வகுப்பு வாரியாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடப்பிரிவு வாரியாகவும் எண்ணிக்கை விவரத்துடன் உரிய படிவத்தில் தயாா் செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

பண மோசடி புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியி... மேலும் பார்க்க

நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நீலகிரிக்கு இன்று(புதன்கிழமை) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது... மேலும் பார்க்க

கீழடி ஆய்வறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தொன்மையின் சிறப்பிடமாக விளங்கும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அர... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன்? உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது ஏன் என்று தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைப்பதால், பணியிட... மேலும் பார்க்க

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை!

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.துபையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உணவகத்தின் கிளைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் நடிகர் ஆர்யா... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க