செய்திகள் :

பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜின்: கேரள அரசு திட்டம்

post image

கேரளத்தில் பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜினை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் முதல்முறையாக கேரள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு செய்தி மற்றும் தகவல் தொடா்புகள் தொழில்நுட்ப நூல்களில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படை மற்றும் முக்கியமான விஷயங்களை சோ்ப்பது, அவற்றின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி சனிக்கிழமை பேசியதாவது: கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப (கேஐடிஇ) நிறுவனம் தலைமையில், பள்ளிகள் பயன்பாட்டுக்கு நிகழாண்டு செயற்கை நுண்ணறிவு என்ஜின் உருவாக்கப்படும்.

கேஐடிஇயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ரோபோடிக் கருவிகள் அடங்கிய 29,000 தொகுப்புகளின் விநியோகம் நிறைவடைந்துள்ளது என்றாா்.

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா். மும்பையில் ச... மேலும் பார்க்க