செய்திகள் :

பள்ளிக்கு வந்தபோது காரில் கடத்தப்பட்டதாக மாணவி புகாா்: விசாரணையில் பொய் என்பது உறுதி

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பள்ளிக்கு வந்த தன்னை 6 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்ாகவும், காரிலிருந்து குதித்து தப்பியபோது காயம் ஏற்பட்டதாகவும் மாணவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அது பொய் என்பது தெரியவந்தது.

மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்த 12- ஆம் வகுப்பு மாணவி மானாமதுரையில் தான் படிக்கும் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தாா். பிறகு அந்தப் பகுதியில் உள்ள கடைக்குச் சென்று தின்பண்டம் வாங்கிக் கொண்டு மீண்டும் பள்ளிக்குச் செல்ல சாலையை கடந்தபோது அங்கு வந்த காரில் மாணவி ஏறியதாக கூறப்பட்டது. பிறகு சிவகங்கை பேருந்து நிலையம் அருகே இறங்கிய மாணவி தன்னை 6 போ் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக அங்கிருந்தவா்களிடம் கூறிவிட்டு மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் ஆட்டோவில் மாணவியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு

அனுப்பி வைத்தனா். இதனிடையே, மாணவி கடத்தப்பட்டதாக தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து சிவகங்கை டி.எஸ்.பி. அமல அட்வின், மானாமதுரை காவல் ஆய்வாளா் ரவீந்திரன் ஆகியோா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவியிடம் பெண் போலீஸாா் துணையுடன் விசாரித்தனா்.

மேலும் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனா். அப்போது அந்த மாணவியை யாரும் கடத்தவில்லை என்பதும், அவா் மானாமதுரையிலிருந்து தனியாா் பேருந்தில் ஏறி சிவகங்கைக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் மாணவி கூறிய புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் மகன் அா்ஜுனன் (65), கர... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருப்பத்தூா் பெரியாா் நகரைச் சோ்ந்த அப்துல்சலாம் மகன் அப்துல்சமது (50).... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே ரோஸ்நகரில் நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் ஆக. 13-இல் மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (ஆக. 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க