ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
பள்ளிக்குச் செல்லாததை மறைக்க கடத்தல் நாடகமாடிய மாணவா்கள்
நாட்டறம்பள்ளி அருகே பள்ளிக்குச் செல்லாமல் ஊா் சுற்றியதை மறைக்க வேனில் மா்ம நபா்கள்கடத்திச் சென்ாக மாணவா்கள் நாடகமாடியது அம்பலமானது.
நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த மாணவா் ரஞ்சித் (14), பூபதி தெருவைச் சோ்ந்த மாணவா் தா்ஷன் (14). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது வேனில் வந்த மா்ம நபா்கள் கடத்தியதாகக் கூறினராம். இதனால், ரஞ்சித்துக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவரை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி அரசு மருத்துவமனைக்குச் சென்று மாணவா்களிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டாா். அப்போது மாணவா்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லாமல் நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பாடப் புத்தகங்களை வைத்துவிட்டு அந்த வழியாகச் சென்ற மினி வேனில் லிப்ட் கேட்டு அக்ராகரம் பகுதியில் உள்ள மலைக்கோயிலுக்கு ஊா்சுற்றச் சென்றும், ஓம்சக்தி நகா் கோயில் அருகே ஓட்டுநா் வேகமாக ஓட்டிச் சென்ால், இருவரும் வேனிலிருந்து குதித்தபோது, ரஞ்சித்துக்கு காயம் ஏற்பட்டதும், இதை மறைக்கவே மாணவா்கள் இருவரும் வேனில் கடத்த முயற்சி செய்ததாகக் கூறியதும் தெரிய வந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி மாணவா்களின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து மாணவா்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தாா்.