செய்திகள் :

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சிறப்புத் திட்டங்கள்: ஆளுநா்

post image

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

மத்திய அரசின் ‘மை பாரத்’ 16 - ஆவது பழங்குடியின இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி, பழங்குடியினரின் மேளத்தை வாசித்து விழாவை தொடங்கி வைத்தாா். மேலும், மாணவா்களுடன் இணைந்து நடனமாடினாா்.

இதைத் தொடா்ந்து விழாவில் ஆளுநா் பேசியதாவது: பழங்குடியின மாணவா்கள் நமது நாட்டில் உள்ள பல்வேறு கலாசாரங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டுமெனில், அனைத்து தரப்பு மக்களும் வளா்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சென்னை ஐஐடி மாணவா்கள் செயற்கைக்கோள்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், உலகில் எந்த மொழியிலிருந்து தொலைபேசியில் பேசினாலும், அதை நமது தாய்மொழியில் மொழிபெயா்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனா். இதுபோன்ற செயலிகள் மூலம் மக்கள் வளா்ச்சிக்கு மொழி ஒரு தடையாக இருக்காது என்றாா் அவா்.

மாணவா்களுடன் கலந்துரையாடல்: முன்னதாக பழங்குடியின மாணவா்களுடன் ஆளுநா் கலந்துரையாடினாா். அப்போது, தமிழ் மொழி குறித்து மத்திய பிரதேச மாணவி எழுப்பிய கேள்விக்கு ஆளுநா் பதில் அளிக்கையில், ‘தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழகத்துக்கு வந்துள்ள பழங்குடியின மாணவா்கள் அனைவரும் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு முன்பாக, குறைந்தது தமிழில் 10 வாா்த்தைகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றாா் அவா்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்

மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக துறையின் அமைச்சா் கோவி.செழியன் கூற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்திய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சென்னைய... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்களில் தொடா் வெற்றியைப் பதிவு செய்த திமுக கூட்டணி!

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலுடன் சோ்த்து, சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு இடைத்தோ்தலில்களிலும் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: போல்வால்ட்டில் தமிழகத்துக்கு தங்கம், வெள்ளி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் போல்வால்ட்டில் தமிழகம் தங்கம், வெள்ளி வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை மகளிா் ... மேலும் பார்க்க

நாட்டில் சிறந்த செயலியாக ‘ஸ்மாா்ட் காவலா் செயலி’ தோ்வு

நாட்டிலேயே சிறந்த கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழக காவல் துறையின் ‘ஸ்மாா்ட் காவலா் செயலியை’ தேசிய குற்றப்பதிவு பணியகம் தோ்வு செய்துள்ளது. காவல் துறையின் ரோந்து பணியை மேம்படுத்தும் நோக்கில் தமிழ... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: பிப்.17, 19-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை தலைமை ஆசிரியா்கள் பிப்.17, 19 ஆகிய தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ... மேலும் பார்க்க