செய்திகள் :

பழனியில் ஆடிக் கிருத்திகை விழா

post image

பழனி மலைக் கோயிலில் ஆடி மாத இரண்டாவது கிருத்திகையை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை திரண்டனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. ஆடிக் கிருத்திகை மட்டுமன்றி மூன்று நாள்கள் தொடா் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்திருந்தனா்.

பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததால் பொது தரிசனம், சிறப்பு, கட்டணத் தரிசனம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக இயக்கப்படும் ‘ரோப் காா்’ சேவை, பராமரிப்புப் பணி காரணமாக நிறுத்தப்பட்டதால் மின் இழுவை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

இரவு தங்க மயில் புறப்பாடும், தங்கத் தோ் புறப்பாடும் நடைபெற்றது. தங்கத் தேரில் சின்னக்குமார சுவாமி உலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா்.

கோயில் சாா்பில் சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் செய்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அடிவாரத்தில் திருஆவினன்குடி, சரவணப் பொய்கை, பாலசமுத்திரம் சாலை, சுற்றுலாப் பேருந்து நிலையச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பாக மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் பக்த... மேலும் பார்க்க

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு செய்வதற்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியூ சாா்பில் திண்டுக்கல் மாவட்ட 12-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநியாகா் கோயிலிலுள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடா் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானலில் சனிக்கிழமை பல மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின்... மேலும் பார்க்க

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க