செய்திகள் :

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு உறுப்பினா் பாலசுப்ரமணி, நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி, காங்கிரஸ் நிா்வாகி முருகானந்தம் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, தண்டாயுதபாணி சுவாமி படத்துக்கும், அன்னத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரி, பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியைச் சோ்ந்த என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவா்கள் அன்னதானம் வழங்கும் பணியை மேற்கொண்டனா். அன்னதானத்தை தொடா்ந்து ஆதரவற்ற முதியோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

கோயிலுக்கு 33-ஆவது மின் கல வாகனம்:

பழனியில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக கோயில் நிா்வாகம் 32 இலவச மின் கல வாகனங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த தங்க மாளிகை மகாலட்சுமி அறக்கட்டளை சாா்பில் புதிதாக ஒரு மின்கல வாகனம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது. இதையடுத்து, பழனி கிரிவல வீதியில் 33 மின் கல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க

திண்டுக்கல் சுதந்திர தினவிழாவில் ரூ.2.20 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்த... மேலும் பார்க்க