செய்திகள் :

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வியாழன்கிழமை இரவு இவரது தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை தாக்கிக் கொன்றது.

இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

கண்ணனூா் மலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க

திண்டுக்கல் சுதந்திர தினவிழாவில் ரூ.2.20 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்த... மேலும் பார்க்க