செய்திகள் :

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

post image

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு, திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை இரவு முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் மறைவட்டார அதிபா் ஜெயசீலன் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, புனித சலேத் மாதாவின் உருவம் தாங்கிய மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.

இந்த பவனி செயிண்ட் மேரீஸ் சாலையிலிருந்து புறப்பட்டு பிரையண்ட் பூங்கா சாலை, கிளப் சாலை, செவண்ரோடு, பேருந்து நிலையப் பகுதி, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல் வழியாக திரு இருதய ஆண்டவா் ஆலயத்தை அடைந்தது வெள்ளிக்கிழமை அதிகாலை அடைந்தது.

இந்த விழாவில் மறை வட்டார அதிபா் ஜெயசீலன் உள்ளிட்ட அருள் பணியாளா்கள், அருள்சகோதரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, மதுரை, திருச்சி,திண்டுக்கல்,தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன.

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க

திண்டுக்கல் சுதந்திர தினவிழாவில் ரூ.2.20 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்த... மேலும் பார்க்க