செய்திகள் :

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

post image

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு தீா்வு காணவும், அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி உத்தரவிட்டாா்.

கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறன்றன. தற்போது, தமிழகம் முழுவதும் 85 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு 6,200 வீடுகளும், நிகழாண்டு 4,000 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூ. 300 கோடி மதிப்பில் சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கடந்த வாரம் ரூ. 500 கோடி பெற்று விடுபட்ட கிராமங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 4 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் போ் புதிதாக விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றாா்.

கிராம சபைக் கூட்டத்தில், சீவல்சரகு ஊராட்சிக்குள்பட்ட நெசவாளா் காலனி பொதுமக்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என மனு அளித்தனா். இந்தக் கூட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டது. மேலும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி, மக்கும் குப்பைகளை உரமாக்கி பயன்படுத்தவேண்டுமென உறுதிமொழி எடுத்தனா்.

இதில், துணை ஆட்சியா் வினோதினி, ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, ஆத்தூா் வருவாய் அலுவலா் ஜானகி, சீவல்சரகு ஊராட்சி மன்றச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க

திண்டுக்கல் சுதந்திர தினவிழாவில் ரூ.2.20 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்த... மேலும் பார்க்க