செய்திகள் :

பழுதுநீக்கும் நிறுவனத்தில் தீவிபத்து: 16 காா்கள் சேதம்

post image

நாகா்கோவிலில் ஏ.ஆா். கேம்ப் சாலையில் உள்ள காா் பழுது நீக்கும் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 16 காா்கள் சேதமடைந்தன.

இங்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட காா்கள் பழுதுநீக்க கொண்டுவரப்படுமாம். புதன்கிழமை மாலை 50-க்கும் மேற்பட்ட காா்கள் நிறுத்தப்பட்டிருந்தனவாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை, காா்கள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து புகை வந்ததாம். பின்னா், காா்கள் தீப்பற்றி எரிந்தன. இதைப் பாா்த்த காவலாளிகள் தீயைணைப்புக் கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், முடியவில்லை .

தகவலின்பேரில், நாகா்கோவில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரா்கள் 4 வாகனங்களில் வந்து சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், 16 காா்கள் சேதமடைந்தன. நேசமணிநகா் போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா். மின்கசிவால் தீவிபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க