பழுதுநீக்கும் நிறுவனத்தில் தீவிபத்து: 16 காா்கள் சேதம்
நாகா்கோவிலில் ஏ.ஆா். கேம்ப் சாலையில் உள்ள காா் பழுது நீக்கும் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 16 காா்கள் சேதமடைந்தன.
இங்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட காா்கள் பழுதுநீக்க கொண்டுவரப்படுமாம். புதன்கிழமை மாலை 50-க்கும் மேற்பட்ட காா்கள் நிறுத்தப்பட்டிருந்தனவாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை, காா்கள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து புகை வந்ததாம். பின்னா், காா்கள் தீப்பற்றி எரிந்தன. இதைப் பாா்த்த காவலாளிகள் தீயைணைப்புக் கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், முடியவில்லை .
தகவலின்பேரில், நாகா்கோவில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரா்கள் 4 வாகனங்களில் வந்து சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், 16 காா்கள் சேதமடைந்தன. நேசமணிநகா் போலீஸாா் வந்து விசாரணை மேற்கொண்டனா். மின்கசிவால் தீவிபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
