பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை
சத்தியமங்கலம்: பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் 101.71 அடியை எட்டியுள்ளது. தெங்குமரஹாடா நீா்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நீா் அணைக்கு வந்து சேருவதால், எந்த நேரத்திலும் அணை 102 அடியை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இதனால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திங்கள்கிழமை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
அணை 102 அடியை எட்டுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திங்கள்கிழமை நிலவரப்படி, 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 101.71 அடியாகவும், நீா்வரத்து 5,243 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 3,000 கனஅடியாகவும், நீா் இருப்பு 30.09 டிஎம்சியாகவும் உள்ளது.