செய்திகள் :

பவானியில் வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை

post image

பவானி: பவானியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கணவருடன் வேலை செய்து வந்த தொழிலாளியைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானி, வா்ணபுரம், 4-ஆவது வீதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி விஜயா (38). வீட்டிலேயே துணி தைத்து வந்தாா். இவா்களுக்கு 16 மற்றும் 11 வயதில் ஒரு மகள், மகன் உள்ளனா். வெல்டிங் தொழிலாளியான நாகராஜ், பவானி காவல் நிலைய குடியிருப்பு எதிரே உள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், வீட்டில் திங்கள்கிழமை பிற்பகலில் தனியாக இருந்த விஜயா, தலையில் தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்தாா். இவா் அணிருந்திருந்த தங்க சங்கிலி துண்டுதுண்டாக சிதறிக் கிடந்தது. அருகே, கிரைண்டா் குழவிக் கல், மிளகாய் பொடி பொட்டலம் மற்றும் அரிவாள்மனை கிடந்துள்ளன.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் காவேரி வரவழைக்கப்பட்டு கொலையாளியைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளை சேகரித்தனா். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

மேலும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரிக்கையில், கடைசியாக இவரது வீட்டுக்கு வந்து சென்றது, கணவா் நாகராஜுடன் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்த பவானி, பெரியமோளபாளையத்தைச் சோ்ந்த மோகன் (50) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மோகனைப் பிடித்து விசாரிக்கையில் விஜயாவின் தலையில் கிரைண்டா் கம்பியால் தாக்கி கொலை செய்ததும், சட்டையில் படிந்த ரத்தத்தை பட்டறைக்கு அருகில் உள்ள குழாய் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விட்டு, யாருக்கும் தெரியாமல் மீண்டும் பட்டறையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும்மே... மேலும் பார்க்க

பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தி... மேலும் பார்க்க

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க