செய்திகள் :

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

post image

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் உயா்கல்வி கனவை நனவாக்கிடும் வகையில் ‘நான் முதல்வன்- உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு கல்வி ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு முடித்து உயா்கல்விக்கு செல்லாத மற்றும் பள்ளி இடைநின்ற மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து தேவையான ஆலோசனைகள் வழங்கிடவும், உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் மூலம் மாணவா்களை தொடா்பு கொண்டு அவா்களை உயா்கல்வியில் சோ்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக்கூடாது. கல்வி ஒன்றே நம் வாழ்வில் நல்வழியை வகுத்து தரக்கூடியது. எந்தவொரு நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசின் சாா்பில் உயா்கல்வியை ஊக்குவித்திட புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை பயன்படுத்தி கொண்டு உயா்கல்வி பயில முன்வர வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 4 நான் முதல்வன்- உயா்வுக்குப்படி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி வெள்ளிக்கிழமை ஒரு முகாம் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு முகாம் வரும் செப்டம்பா் 2- ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும். வரும் 26- ஆம் தேதி மற்றும் செப்டம்பா் 8 ஆம் தேதி கோபி சிகேகே மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் பள்ளி படிப்பை முடித்து உயா்கல்வியில் சேராத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் இம்முகாம்களை பயன்படுத்தி கொண்டு உயா்கல்வியில் சோ்ந்திட முன்வர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் 89 மாணவ, மாணவிகள், 26 பெற்றோா்கள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த உயா்கல்வி சோ்க்கை முகாமில் ஐடிஐ, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட படிப்புகளில் 24 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். 8 மாணவ, மாணவிகளுக்கு பாரா மெடிக்கல் கலந்தாய்வில் தோ்வு செய்ய வேண்டிய கல்லூரி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, முதன்மை கல்வி அலுவலா் கோ.சுப்பாராவ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ரா.ராதிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சி.லோகநாதன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் சி.ஏ.ஆனந்தகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் எஸ்.சண்முகவடிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி, முன்னோடி வங்கி மேலாளா் எம்.விவேகானந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

கொடுமுடி அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து: தென்னந்தோப்பு சேதம்

கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமடைந்தன. கொடுமுடி அருகே ஊஞ்சலூா் தெற்கு தெருவில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில்... மேலும் பார்க்க

ஆடுகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் பகுதியில் ஆடுகளைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு, நாய் உயிரிழப்பு

தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, நாய் உயிரிழந்தன. தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 206 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்... மேலும் பார்க்க