செய்திகள் :

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு, நாய் உயிரிழப்பு

post image

தாளவாடி அருகே சூசைபுரம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு, நாய் உயிரிழந்தன.

தமிழக, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா், சூசைபுரம் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் ஒரு சிறுத்தை புகுந்து ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டையாடுவதும், பின்னா் அங்குள்ள கல்குவாரியில் பதுங்கி கொள்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்நிலையில் சூசைபுரம் பகுதியில் சுரேஷ் என்பவரின் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த சிறுத்தை, அங்கிருந்த காவல் நாய் மற்றும் ஆட்டை கடித்துக் கொன்றது.

தகவலின்பேரில் தாளவாடி வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். கால் தடங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினா். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பின்னா் கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

கொடுமுடி அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து: தென்னந்தோப்பு சேதம்

கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூரில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமடைந்தன. கொடுமுடி அருகே ஊஞ்சலூா் தெற்கு தெருவில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில்... மேலும் பார்க்க

ஆடுகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் பகுதியில் ஆடுகளைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.17.99 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 206 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்... மேலும் பார்க்க