செய்திகள் :

பாகிஸ்தானியா்கள் வெளியேற அவகாசம் நிறைவு: அட்டாரி-வாகா எல்லை மூடல்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தானியா்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், ‘அட்டாரி-வாகா சா்வதேச எல்லை’ வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான ராஜீய உறவை துண்டித்த இந்தியா, பாகிஸ்தானியா்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது.

மேலும், பாகிஸ்தானில் இந்தியாவுக்கான தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத் தொடா்ந்து, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவா்களின் துணை ஊழியா்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். இதற்கான அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான புதன்கிழமை, 125 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறினா்.

ஏப். 24-ஆம் தேதி முதல் கடந்த 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனா். அதேபோல், 1,617 இந்தியா்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பியுள்ளனனா். இதனிடையே, பாகிஸ்தான் நுழைவு இசைவுடன் (விசா) 23 இந்தியா்கள் அந்நாட்டுக்குள்ளேயும் நீண்ட கால விசாவுடன் 224 பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்குள்ளே நுழைந்துள்ளனா்.

நீண்டகால, ராஜீய அல்லது அதிகாரபூா்வ விசா வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானியா்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா சா்வதேச எல்லை வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும... மேலும் பார்க்க

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்... மேலும் பார்க்க