பாகிஸ்தானை மீட்க அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும்: மோடி
பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 26) கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதத்தை ஒழித்து மனிதநேயத்தைக் காப்பதற்கான போராட்டமே ஆபரேஷன் சிந்தூர் எனக் குறிப்பிட்ட மோடி, பயங்கரவாதத்தை சுற்றுலாவாக பாகிஸ்தான் கருதுவதாகவும், இது மிகவும் ஆபத்தானது எனவும் விமர்சித்தார்.
பாகிஸ்தான் குடிமக்கள் உண்ணும் உணவு அமைதியான சூழலுக்கு மத்தியில் இருக்க வேண்டுமே தவிர தோட்டாக்களுக்கு மத்தியில் அல்ல என்றும் தெரிவித்தார்.