செய்திகள் :

பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவருக்கு இந்தியக் குடியுரிமை

post image

பனாஜி: பாகிஸ்தானில் பிறந்த கிறிஸ்தவரான பிரெண்டன் வெலன்டைன் கிரேஸ்டோ (44), 19 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றாா். பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா முதல்வா் பிரமோத் சாவத் குடியுரிமைக்கான சான்றிதழை அவருக்கு வழங்கினாா்.

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இன்னல்களால் பாதிக்கப்பட்டு 2014 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தோருக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி பிரெண்டன் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளாா்.

இதன் மூலம் கோவாவில் இச்சட்டத்தின்கீழ் மூன்றாவது நபருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த பிரெண்டன், இந்தியப் பெண்ணான மொ்லின் பொ்னாண்டோவை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடிமகனாகியுள்ளாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா (78) என்ற பாகிஸ்தானில் பிறந்த நபருக்கு முதல்முறையாக கோவாவில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி நிர்வாகியுமான சௌரவ் பரத்வாஜுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் கால... மேலும் பார்க்க

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க