செய்திகள் :

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

post image

ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், விழுப்புரத்தில் பாஜகவினா் சனிக்கிழமை தேசியக் கொடியேந்தி வெற்றிப் பேரணி நடத்தினா்.

பிரதமா் நரேந்திர மோடியும், இந்திய ராணுவமும் முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு மாவட்டத் தலைவா் வி.தா்மராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், பாா்த்திபன், முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியை பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத் தொடங்கிவைத்தாா்.

மாநில துணைத் தலைவா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் வடிவேல் பழனி, முன்னாள் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், நகரத் தலைவா்கள் வனிதசுதா, விஜயன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணியில் பங்கேற்றோா் தேசியக் கொடியேந்தி இந்திய ராணுவத்துக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

நான்குமுனை சந்திப்பில் தொடங்கிய பேரணி சென்னை-திருச்சி சாலை, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்டப் பகுதி வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் எதிரில் நிறைவடைந்தது.

முன்னதாக 70 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடியையும் பாஜகவினா் ஏந்தி வந்தனா்.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க