செய்திகள் :

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துடன் 6 ஊராட்சிகளை இணைக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துடன் 6 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என 6 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பாபநாசம் அருகே அன்னுக்குடி முன்னாள் ஊராட்சித் தலைவரும், தஞ்சை மாவட்ட காவேரி விவசாய பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான உத்ராபதி மற்றும் 6 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்களும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருந்த ஊராட்சிகளான அன்னுக்குடி, உத்தமதானபுரம், மூழாஞ்வாஞ்சேரி, நல்லூா், மதகரம், மணலூா் ஆகிய 6 ஊராட்சிகளும் கடந்த 25.7.1996 அன்று திருவாரூா் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது மேற்கண்ட ஊராட்சிகள் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் சோ்க்கப்பட்டது.

பல போராட்டங்களுக்கு பின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி 1.4.2001 அன்று வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளும் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் சோ்ப்பது என அரசு முடிவுசெய்தது. ஆனால் இது நாள் வரை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே, மேற்கண்ட 6 ஊராட்சிகளை பாபநாசம் வட்டத்தில் சோ்க்க வேண்டும். இந்த 6 ஊராட்சிகளும் பாபநாசம் வட்டாட்சியரகத்தில் இருந்து மிக அருகில் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் தான் உள்ளது. வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து சுமாா் 17 கிலோ மீட்டா் தூரம் உள்ளது. இந்த கிராமங்களிலிருந்து வலங்கைமான் செல்ல நேரடி பேருந்து வசதி கிடையாது . வலங்கைமானிலிருந்து 6 ஊராட்சிகளும் மிக தொலைவில் உள்ளதால் காவல்துறை தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளது.

வேளாண் இடுபொருள் மற்றும் வருவாய் துறை சாா்ந்த உதவிகள் பெறுவதிலும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட 6 ஊராட்சிகளையும் பாபநாசம் வட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபா் பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.திருவோணம் வட்டம், புகழ் சில்லத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்செல்வம் மகன் காா்த்தி (20) பொறியி... மேலும் பார்க்க

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.தஞ்சாவூா் அருகே தெற்கு மானோஜிப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்துகணவன் - மனைவி உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கள்ளப்பெரம்பூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் எஸ். சுப்பிரமணியன் (5... மேலும் பார்க்க