செய்திகள் :

பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஏப். 27ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, மே 1ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 6ஆம் கால யாக பூஜையைத் தொடா்ந்து கலசங்கள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டன. இதையடுத்து மூலவா் விமானத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் பச்சைக் கொடியசைத்ததும் உலகம்மை, பாபநாச சுவாமி, விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

அப்போது, அங்கு தென்காசி, விருதுநகா், மதுரை என வதிருந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிவாய நம, நமச்சிவாய என முழக்கம் எழுப்பி வழிபட்டனா். தொடா்ந்து ட்ரோன் மூலம் பக்தா்கள் மீது தீா்த்தம்தெளிக்கப்பட்டது. போலீஸாா், ஊா்க்காவல் படையினா் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தீயணைப்பு மீட்புப் படையினா் தயாா் நிலையில் இருந்தனா்.

இவ்விழாவில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, திருநெல்வேலி புகா் மாவட்ட அதிமுக செயலா் இசக்கி சுப்பையா எம்எல்ஏ, முன்னாள் பேரவைத் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான இரா. ஆவுடையப்பன், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சிவனு பாண்டியன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொ) சிவகாமசுந்தரி, டிஸ்பி சதீஷ், அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, துணை ஆணையா் ஜான்சி ராணி, உதவி ஆணையா்கள் ரா.சுப்புலட்சுமி, தங்கம், செயற்பொறியாளா் சந்திரசேகா், வட்டாட்சியா் வைகுண்டம், செயல் அலுவலா் வே.ராஜேந்திரன்,ஆய்வாளா் ச.கோமதி, ஸோகோ மென்பொருள் நிறுவன இயக்குநா் ஸ்ரீதா் வேம்பு, திமுக விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி.கணேசன், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி பேராசிரியா்கள், பணியாளா்கள், அனைத்துத்துறை அதிகாரிகள், பக்தா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த இளைஞா் ஒருவா் திடீரென காா்களின் கண்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை

மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தி... மேலும் பார்க்க

இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். திரு... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத... மேலும் பார்க்க