செய்திகள் :

பாமக: தைலாபுரத்தில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு; தாய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அன்புமணி!

post image

கிட்டத்தட்ட 8 மாதங்களாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கும் முட்டல், மோதல் நடந்து வருகிறது.

இருவரும் மாறி மாறி மாநாடுகள், பொதுக்குழு நடத்துவது, கட்சியினரை நீக்குவது, சேர்ப்பது என இருந்து வருகின்றனர்.

இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்படுத்தப் பல தரப்பினர் முயன்றும் ஒரு பயனும் இல்லை.

அன்புமணி தைலாபுரம் சென்று ராமதாஸிடம் பேசியும் பயனில்லை.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

ராமதாஸ் செல்லவில்லை

ராமதாஸ் வெளிப்படையாகவே அன்புமணியை விமர்சித்து வருகிறார். ஆனால், கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 9), அன்புமணி நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, ராமதாஸிற்காக மேடையில் ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் செல்லவில்லை.

கடந்த மாதம், ராமதாஸ் இல்லாத நேரத்தில், தைலாபுரம் சென்ற அன்புமணி தனது தாய் சரஸ்வதியைச் சந்தித்து வந்தார்.

பதிலுக்கு, பனையூருக்கு சரஸ்வதியும் வந்திருந்தார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, தன் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை ராமதாஸ் எழுப்பி இருந்தார்.

ஏன் அன்புமணி தைலாபுரம் சென்றார்?

இந்த நிலையில், நேற்று தனது தாய் சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, குடும்பத்துடன் தைலாபுரத்திற்கு விசிட் அடித்திருக்கிறார் அன்புமணி.

ராமதாஸ் முன்னிலையில், தனது தாயின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் அன்புமணி. ஆனால், ராமதாஸ், அன்புமணி இருவரும் பேசிக்கொண்டார்களா... இந்த நிகழ்வு இருவரும் சமாதானம் எட்டியதற்கான அறிகுறியா என்பது தெரியவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

MK Stalin: "அமெரிக்கா வரியால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்" - பிரதமருக்கு அவசர கடிதம்!

அமெரிக்க அதிபர் இந்தியா மீது விதித்துள்ள 50% வரியினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்றும், இதனை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

PMK: "வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்"- அன்புமணியுடன் சமாதானமா என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில்

தைலாபுரத்தில் இன்று ( ஆகஸ்ட்16) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது, "பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகச் சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்திகள் வருகின்றன.நாளை ... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு: ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்கள் நேரில் அஞ்சலி | Photo Album

இல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல.கணேசன் மறைவு- தலைவர்கள் அஞ்சலிஇல... மேலும் பார்க்க

Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவத... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை: 'தலித்துகள் மனிதர்கள் இல்லையா?'- ஸ்டாலினுக்கு அம்பேத்கர் பேரன் கண்டனம்

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்தும், தங்களது பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகைக்க... மேலும் பார்க்க

"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்... மேலும் பார்க்க