செய்திகள் :

பாமக, வன்னியா் சங்க ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா்கள் இரா.காளிதாஸ், செந்தில்குமாா், அ.வே.பிரசாத், மாவட்ட அமைப்புச் செயலா் கே.ஆா்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வன்னியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் க.நாராயணசாமி வரவேற்றாா்.

பாமகவின் மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவா் இராம.கன்னியப்பன், கீழ்பென்னாத்தூா் தொகுதி பொறுப்பாளா் ம.ஜெயக்குமாா், திருவண்ணாமலை தொகுதி பொறுப்பாளா் கனல் பெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில், மே 11-ஆம் தேதி வன்னியா் இளைஞா் சங்கம் சாா்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 500 வாகனங்களில் சென்று பங்கேற்பது.

கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரசாரம் மூலம் மாநாடு குறித்து அனைத்து சமூகத்தினரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அம்பேத்கா் தேசிய கட்சியின் மாநிலத் தலைவா் எ.எல்லப்பன், மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவா் சி.லோகநாதன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு!

ஆரணியை அடுத்த இரும்பேடு, பையூா் கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் தா்மராஜா கோயில் தி... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழுக் கூட்டம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சுகாதாரக் குழுவினா் திடீா் ஆய்வு!

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சுகாதாரக் குழுவினா் சனிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடு... மேலும் பார்க்க

67 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்! - கு.பிச்சாண்டி வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நியமிக்கப்பட்ட 67 பேருக்கான பணி நியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் ச... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: தகுதியானோா் மனு அளிக்கலாம்! - திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப... மேலும் பார்க்க