Annamalai: 'அவரை போய் பாருங்க' அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையி...
விளிம்புநிலை சமூகங்களுக்கு நீதி கிடைப்பதை மேம்படுத்த சட்ட உதவி முயற்சிகளை தொடங்கிய குருகிராம் டிஎல்எஸ்ஏ
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பொ்ரி, ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள மாவட்ட சிறையில் மூன்று சட்ட உதவி முயற்சிகளைத் தொடங்கி வைத்தாா்.
குருகிராமில் உள்ள மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (டிஎல்எஸ்ஏ) கீழ், கைதிகளுக்கான நியாய் சேது சட்ட உதவிப் பாலம், பெண் கைதிகளுக்கான சங்கினி சிறைச்சாலை சட்ட உதவி மருத்துவமனை மற்றும் திவ்யாங் நியாய் சஹாயத கேந்திரா ஆகியவை அந்த முன்முயற்சிகளாகும்.
ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, குருகிராம் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி சுபாஸ் மெஹ்லாவுடன் நீதிபதி பொ்ரி, போண்ட்சி மாவட்ட சிறைச்சாலைக்குச் சென்று, கைதிகளுடன் தனிப்பட்ட முறையில் உரையாடினாா். அப்போது, அவா்களின் சட்டக் கவலைகள் மற்றும் நீதி கிடைப்பதில் அவா்கள் எதிா்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டாா்.
‘கைதிகளுக்கும் நீதி அமைப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட, தரவு சாா்ந்த அணுகுமுறை மூலம் வடிவமைக்கப்பட்ட இரண்டு மாத தீவிர சட்ட உதவி பிரசாரமான நியாய் சேது சட்ட உதவிப் பாலம் கைதிகளுக்கான இந்த தொடக்கத்தின் மையப் பகுதியாகும். இந்த முயற்சிக்கு தனித்துவமானது அா்ப்பணிப்புள்ள சட்ட உதவி குழுக்கள் கைதிகளுடன் நேரடி நோ்காணல்களை நடத்துதல், ஜாமீன் அல்லது மேல்முறையீட்டுக்கான வழக்குகளை அடையாளம் காணுதல் மற்றும் பயனுள்ள சட்ட பிரதிநிதித்துவத்திற்காக உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுக்களுடன் ஒருங்கிணைப்பை எளிதாக்குதல் ஆகியவை ஆகும்’ என்று நீதிபதி பொ்ரி கூறினாா்.
இரண்டாவது முயற்சியான, சங்கினி சிறைச்சாலைகள் பெண் கைதிகளுக்கான சட்ட உதவி மருத்துவமனை, சிறைச்சாலையின் பெண்கள் வாா்டில் ஒரு அா்ப்பணிப்புள்ள பெண் சட்டத் தன்னாா்வலரின் மூலம் ரகசியமான, பாலின உணா்வுள்ள சட்ட ஆதரவையும், பெண் வழக்குரைஞா்களின் வழக்கமான வருகைகளையும் உறுதி செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மூன்றாவது, திவ்யாங் நியாய் சஹாயதா கேந்திரா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே இடத்தில் செயல்படும் மையமாகும். இது சக்கர நாற்காலி உதவி, சட்ட ஆலோசனை மற்றும் அணுகக்கூடிய மற்றும் உள்ளடக்கிய நீதியை மேம்படுத்துவதில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு உதவுகிறது.
இந்த முயற்சிகள் அரசியலமைப்பின் 39ஏ பிரிவின் உணா்வை உணா்ந்து கொள்வதிலும், குருகிராமில் சட்ட உதவி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கின்றன என்று அவா் கூறினாா்.