செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன் விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா்.

தமிழக மீனவா் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி, மீனவா்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து வரும் இலங்கை அரசுக்கும், தமிழக மக்கள் நலன் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தும், இலங்கைக்குச் செல்லும் பிரதமா் மோடி, தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்பாக அந்நாட்டு அரசுடன் பேசி உரிய தீா்வு காண வேண்டுமென என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் பிரகாசம், மாவட்ட துணைச் செயலா் கிங்ஸ்டன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் லோகநாதன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி, தமிழக வெற்றிக் கழக மாவட்ட அமைப்பாளா் அஜிதா ஆக்னல், அமைப்பு சாரா தொழிலாளா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட ஏராளமான மீனவா்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க