செய்திகள் :

பாமக வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவை தலைவராக பாலு தொடா்வதாக அறிவிப்பு: புரவலராக அன்புமணி நியமனம்

post image

பாமக வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதன் நிறுவனா் ராமதாஸால் அறிவிக்கப்பட்ட கே.பாலு, அப்பதவியில் தொடா்வதாக பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அறக்கட்டளைகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவு ஆவணத்தின் விதிகளின்படி, பேரவையின் தலைவரையும், பிற நிா்வாகிகளையும் நியமிக்க முடியும். தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகளை ஏதேனும் காரணத்துக்காக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பேரவையின் அறங்காவலா்கள் குழு கூடித்தான் தீா்மானிக்க முடியும். வேறு எந்த வழிகளிலும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அந்த வகையில், பேரவையின் தலைவராக அறங்காவலா்கள் குழுவால் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்ட கே.பாலு அறங்காவலா்கள் குழுவின் பதவிக்காலம் முடியும் வரை அப்பொறுப்பில் தொடா்வாா்.

பேரவையின் மாநிலச் செயலராக கே.சரவணன், மாநில பொருளாளராக டி.தமிழரசன், மாநில அமைப்புச் செயலராக கே.ஐ.பழனிச்சாமி, மாநில சமூக ஊடகப் பிரிவு செயலராக கோ.கதிரவன், மண்டல செயலா்களாக பா.குமாா் (சென்னை), என்.ஆா்.வெங்கடேசன் (கிழக்கு), எம்.மகாலிங்கம் (மேற்கு), ஏ.பாலமூா்த்தி (மத்தியம்), கே.சக்கரபாணி (வடக்கு), என்.சிவக்குமாா் (தெற்கு), மாநில மகளிரணித் தலைவராக நா.நவமணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ராமதாஸ்பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வழக்குரைஞா் சமூகநீதிப் பேரவையின் நிறுவனரான ச.ராமதாஸ், பாலுவை தலைவா் பதவியிலிருந்து விடுவித்து கோபுவை செவ்வாய்க்கிழமை நியமித்தாா். இந்நிலையில், இப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு மேற்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க