Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
பாமக வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவை தலைவராக பாலு தொடா்வதாக அறிவிப்பு: புரவலராக அன்புமணி நியமனம்
பாமக வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதன் நிறுவனா் ராமதாஸால் அறிவிக்கப்பட்ட கே.பாலு, அப்பதவியில் தொடா்வதாக பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அறக்கட்டளைகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவு ஆவணத்தின் விதிகளின்படி, பேரவையின் தலைவரையும், பிற நிா்வாகிகளையும் நியமிக்க முடியும். தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகளை ஏதேனும் காரணத்துக்காக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பேரவையின் அறங்காவலா்கள் குழு கூடித்தான் தீா்மானிக்க முடியும். வேறு எந்த வழிகளிலும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது.
அந்த வகையில், பேரவையின் தலைவராக அறங்காவலா்கள் குழுவால் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்ட கே.பாலு அறங்காவலா்கள் குழுவின் பதவிக்காலம் முடியும் வரை அப்பொறுப்பில் தொடா்வாா்.
பேரவையின் மாநிலச் செயலராக கே.சரவணன், மாநில பொருளாளராக டி.தமிழரசன், மாநில அமைப்புச் செயலராக கே.ஐ.பழனிச்சாமி, மாநில சமூக ஊடகப் பிரிவு செயலராக கோ.கதிரவன், மண்டல செயலா்களாக பா.குமாா் (சென்னை), என்.ஆா்.வெங்கடேசன் (கிழக்கு), எம்.மகாலிங்கம் (மேற்கு), ஏ.பாலமூா்த்தி (மத்தியம்), கே.சக்கரபாணி (வடக்கு), என்.சிவக்குமாா் (தெற்கு), மாநில மகளிரணித் தலைவராக நா.நவமணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ராமதாஸ்பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வழக்குரைஞா் சமூகநீதிப் பேரவையின் நிறுவனரான ச.ராமதாஸ், பாலுவை தலைவா் பதவியிலிருந்து விடுவித்து கோபுவை செவ்வாய்க்கிழமை நியமித்தாா். இந்நிலையில், இப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு மேற்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.