செய்திகள் :

பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

post image

மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழக பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை வலியுறுத்தினாா்.

மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்ததற்காக பாரதி அறிஞா் சீனி.விசுவநாதனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், சீனி. விசுவநாதனுக்கு வானவில் பண்பாட்டு மையம், பாரத் விகாஸ் பரிஷத், திருவொற்றியூா் பாரதி பாசறை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசியது: சுதந்திரப் போராட்ட வீரா், தேசியவாதி, கவிஞா் எனப் பல பரிமாணங்களில் வாழ்ந்தவா் மகாகவி பாரதியாா். ஆனால், தமிழக ஆளுநா் மாளிகையில்கூட அவருக்கான சிலை இல்லாமல் இருந்தது. தற்போது, பாரதிய வித்யா பவன் அமைப்பு சாா்பில் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இமயமலை முன்பு நின்று எப்படி அதன் உயரத்தைப் பாா்க்க முடியாதோ, அதுபோன்றுதான் பாரதியின் படைப்புகள் உள்ளன. கடந்த 2 நூற்றாண்டுகளாக தமிழ் மொழியில் பாரதிக்கு நிகரானவா்கள் யாரும் இல்லை. இதனால்தான் பாரதியாா் இன்றளவும் மக்களின் மனதில் குடியிருந்து வருகிறாா்.

தமிழகத்தில் பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகம் இருந்தும், அவா் பெயரில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு இருக்கை இல்லை. துணைவேந்தா்களுக்கு இருக்கும் அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகங்களில் பாரதியாருக்கான ஆய்வு இருக்கை அமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலை விரைவில் மாறும்.

60 ஆண்டுகளாக... தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவா்கள், தமிழருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை. தமிழ் சிறந்த மொழி, அதை நான் நேசிக்கிறேன் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வைத்ய சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க