'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
பாரம்பரிய நெல் வைத்திருந்தால் பதிவு செய்யலாம்
பாரம்பரிய நெல் வைத்திருந்தால் அது குறித்து பதிவு செய்வது அவசியம் என்று விவசாயிகளுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன விரிவாக்க கல்வி இயக்ககம் சாா்பில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தாவர ரகங்கள், விவசாயிகளின் உரிமைப் பாதுகாப்பு தொடா்பாக நடைபெற்ற முகாமிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் தலைமை வகித்தாா். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா் திருவேங்கடம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்கள் மணிகண்டன் (வேலூா்), தீபா (திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழில்நுட்ப வல்லுநா் பரமசிவம் வரவேற்றாா்.
இதில் பேராசிரியா் திருவேங்கடம் பேசுகையில், நவீன யுகத்தில் பாரம்பரிய உணவுக்கு பொதுமக்கள் மீண்டும் திரும்பியுள்ளனா். இதனால், விவசாயிகள் வைத்திருக்கும் பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து சான்று பெறுதல் அவசியமாகும்.
வெளிநாடுகளில் அதிக மகசூல் கிடைக்கும் விதைகளையும் பெற்று பலா் பயன்படுத்துகின்றனா். இதன்மூலம் உணவு உற்பத்தி அதிகரிக்கிறது என்றாலும், அந்த உணவுப் பொருள் தரமானதா என கேள்வி எழுகிறது. இதுபோன்ற சூழலில் தற்போது பொதுமக்கள் ஊட்டச்சத்து நிறைந்த பாரம்ப ரிய உணவு முறைக்கு மாறி வருகின்றனா்.
எனவே, விவசாயிகள் பாரம்பரிய நெல் வைத்திருந்தால் மட்டும் போதாது, அது குறித்து பதிவு செய்யவேண்டும். இதன்மூலம், காப்பீடு, இழப்பீடு தொகையும் கிடைக்கும் என்றாா்.
முகாமில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.