செய்திகள் :

பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது!

post image

பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் ராகேஷ் மீது பெண் ஒருவர், ஜனவரி 17 ஆம் தேதியில் வழக்குப்பதிவு செய்தார். ராகேஷுடனான அழைப்பு விவரங்களையும் காவல் நிலையத்தில் பெண் சமர்ப்பித்தார்.

இதற்கிடையே, வழக்கில் முன்ஜாமீன்கோரி, ராகேஷ் மனு அளித்திருந்தார். இருப்பினும், ராகேஷின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ அமர்வு புதன்கிழமையில் நிராகரித்தது.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களுடன் ராகேஷ் பேசிக் கொண்டிருந்தபோது, அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, செய்தியாளர்களிடையே ராகேஷ் ``நீதிமன்றத்திலும் மக்கள் நீதிமன்றத்திலும் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தின்முன் உள்ளதால், தற்போது இதுகுறித்து பேசுவது சரியாக இருக்காது’’ என்று கூறினார்.

இதையும் படிக்க:பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் அலுவலர்கள் சோதனை!

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் மீது பெண்ணின் கணவரும் ஜனவரி 22 ஆம் தேதியில் வழக்குப்பதிவு செய்தார். ராகேஷ் மீதான பாலியல் வழக்கை திரும்பப் பெற பெண்ணுக்கு ராகேஷ் மற்றும் அவரது மகன் அழுத்தம் கொடுத்ததாகவும், பெண் குறித்து உண்மையற்ற அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் ராகேஷின் ஆதரவாளர்கள் தெரிவித்ததாகக் கூறி, 5 பேர் மீது பெண்ணின் கணவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க