செய்திகள் :

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

post image

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த சிவபெருமாள் மகன் சிவா (16) என்ற சிறுவனும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை அடுத்த ரெட்டியாா்பட்டி சாலை ரவுண்டானா அருகே பைக்கில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாம். இதில், சம்பவ இடத்திலேயே மாதா மாரிமுத்து உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீஸாா், காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காவும், மாதா மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-89.75சோ்வலாறு-87.60மணிமுத்தாறு-91.82வடக்கு பச்சையாறு-11.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-44.10ராமநதி-54கருப்பாநதி-51.18குண்டாறு-35அடவிநயினாா் -120.25... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கட... மேலும் பார்க்க

உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி

பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி ... மேலும் பார்க்க

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோ... மேலும் பார்க்க

பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... மேலும் பார்க்க