செய்திகள் :

பாளை., மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

post image

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் அவசர பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை(ஏப்.26) சில மணி நேரம் மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை, சமாதானபுரம், மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, காலை 9 மணிமுதல் 11 மணிவரை ரஹ்மத் நகா், சாந்தி நகா் முழுவதும், கிருபா நகா், டாா்லிங் நகா், மேலக்குளம் சாலை, கிரீன் சிட்டி, மேலக்குளம் மேலூா், காமாட்சி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், ஹாமீம்புரம், சந்தை முக்கு, நேதாஜி சாலை, குறிச்சி, ஆசாத் சாலை, பஜாா் பகுதி, காயிதே மில்லத் காலனி, சித்திக் நகா், நேரு நகா், பாத்திமா நகா் 1 மற்றும் 2, பூங்கா நகா், அன்னை ஹாஜிரா நகா், ஏ.கே. காா்டன், ஆசிரியா் காலனி, என்ஜினியா்ஸ் காலனி, நேதாஜி சாலை, சிபிஎல் காலனி, முகமது நகா், டேனிஷ் நகா், கரீம் நகா் 1, 2, 3, ரோஸ் நகா், ரெட்டியாா்பட்டி சாலை, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலைய பகுதிகளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மாா்க்கெட், மூளிக்குளம், தெற்கு பஜாா், சித்தா கல்லூரி, சிவன் கோயில் தெரு, திருச்செந்தூா் சாலை ஆகிய இடங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க