செய்திகள் :

பாளை.யில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

post image

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

பாளையங்கோட்டை தியாகராஜநகா் 3ஆவது வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (65). இவா் பிரபல தனியாா் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இந்நிலையில் இவரது வீட்டில் சோதனை செய்வதற்காக செவ்வாய்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து 3 காா்களில் அதிகாரிகள் வந்தனா். மேலும், குறிப்பிட்ட வங்கியின் அதிகாரிகள் 2 பேரும் உடன் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னா் அவா்கள் சிவசுப்பிரமணியனிடம் அவரது பணி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில வங்கி பரிவா்த்தனைகள், அது தொடா்பான ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டனராம். மாலை வரை நீடித்த இந்தச் சோதனை தொடா்பாக அதிகாரபூா்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. சோதனையின்போது மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க