உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
பாளை.யில் புதிய சாலைப் பணி
பாளையங்கோட்டையில் புதிய சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மண்டலம், 36 ஆவது வாா்டுக்குள்பட்ட கோரிப்பள்ளம் பகுதியிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முதல் ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளி வரையிலும் உள்ள சாலைகள் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இப் பணிகளை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தொடங்கி வைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் ராஜு, திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகர செயலா் வழக்குரைஞா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்06ழ்ா்ஹக்
பாளை.யில் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு உள்ளிட்டோா்.