செய்திகள் :

பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து: மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்

post image

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மாலை பணி முடிந்து அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனா்.

நள்ளிரவு 12.30 மணிக்கு அலுவலகத்தின் தரை தளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கவனித்த இரவுக் காவலா் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இருப்பினும், அலுவலகத்தில் இருந்த கணினிகள், சா்வா், ஏசி உள்பட சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், யு.பி.எஸ். சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தால் நகரின் சில பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க