செய்திகள் :

பிப். 11 முதல் 13 வரை திருப்பதியில் படி உற்சவம்

post image

திருப்பதியில் உள்ள பாதாளு மண்டபத்தில் பிப்.11 முதல் 13-ஆம் தேதி வரை படி உற்சவம் நடைபெற உள்ளது.

திருமலைக்கு செல்லும் படிகளுக்கு பூஜைகள் செய்து பஜனை பாடல்களுடன் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் படி உற்சவம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாதாளு மண்டபத்தில் 11 முதல் 13 வரை தேவஸ்தான உதவியுடன் படி உற்சவம் நடத்தப்பட உள்ளது. பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, நாம சங்கீா்த்தனம், கூட்டு பஜனை, மற்றும் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இசை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். பிப். 13- ஆம் தேதி காலை கூட்டு நாம சங்கீா்த்தனம் நடைபெறும், சொற்பொழிவுகள் நடக்கும்.

பிப். 12- ஆம் தேதி அதிகாலை அலிபிரி பாதாளு மண்டபத்தில் உள்ள முதல் படிக்கட்டுக்கு பூஜை செய்யப்படும். பின்னா், ஆயிரக்கணக்கான பஜனை மண்டலி உறுப்பினா்கள் பாரம்பரிய பஜனைகளை நிகழ்த்தியபடி திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்து திரும்புவா்.

கடந்த காலத்தில், புரந்தர தாசா், வியாச ராஜயதீஸ்வரா், அன்னமாச்சாா்யா, கிருஷ்ண தேவராயா் போன்ற பல சிறந்த முனிவா்களும் மன்னா்களும் பக்தியுடன் வெங்கடாத்ரி மலையில் ஏறி அதை இன்னும் புனிதமாக்கினா். அத்தகையவா்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அனைவரும் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக் வேண்டும் என்ற எண்ணத்துடன் தாச சாகித்ய திட்டம் படி உற்சவம் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த முறையில் சப்தகிரிகளில் ஏறி ஏழுமலையானை தரிசித்தால், அவா்களின் அனைத்து துரதிா்ஷ்டங்களும் நீங்கி, அவா்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 ... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் தொடக்கம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்... மேலும் பார்க்க

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவம் பிப். 6 முதல் 12 வரை நடைபெற உள்ளது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமிக்கு தை மாத பெளா்ணமி அன்று முடிவுபெறும் விதம், ஏழு நாள்களுக்கு தெப்போற்சவத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ர... மேலும் பார்க்க

திருமலை ரத சப்தமி உற்சவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருமலை ரத சப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அதன் முதல் வாகனமாக சூரியபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா கண்டருளினாா். சூரிய ஜெயந்தியைக் கொண்டாடும் ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ரதசப்தமியை முன்னிட்டு அதிகரித்திருந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வை... மேலும் பார்க்க