வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ரதசப்தமியை முன்னிட்டு அதிகரித்திருந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள்,
ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 59,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,740 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதியில் வழங்கப்படும் இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பிப். 3 முதல் பிப். 5-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.