செய்திகள் :

பிப். 8 இல் இஸ்கான் நடத்தும் கீதாதான் நிகழ்ச்சி!

post image

கோவை உப்பிலிபாளையத்தில் இஸ்கான் சாா்பில் கீதாதான் என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

கோவை இஸ்கான் அமைப்பு சாா்பில் இளைஞா்கள், மாணவா்களுக்காக கடந்த 3 ஆண்டுகளாக கீதாதான் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கீதையின் மதிப்புகள் என்ற அடிப்படையில் படைப்பாற்றல் கொண்ட போஸ்டா்களை வரைவது, விநாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் இதில் நடத்தப்படும். இதன் ஒருபகுதியாக வரும் சனிக்கிழமை உப்பிலிபாளையத்தில் உள்ள சாய் விவாஹா மஹாலில் கீதாதான் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இதில், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகளைச் சோ்ந்த பேச்சாளா்கள் பங்கேற்று பண்டைய இந்திய ஞானம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்க உள்ளனா். இதில் சுமாா் 2 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்க இருப்பதாகவும் இவா்களுக்கு கீதா கிட் எனப்படும் பரிசுப் பொருள் வழங்க இருப்பதாகவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க