பிரகாசபுரம் தேவாலயத்தில் அசன விருந்து
நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய 128ஆவது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அசன விருந்து நடைபெற்றது.
கடந்த 16ஆம் தேதி தொடங்கி விழாவில், 22ஆம் தேதி பிரதிஷ்டை பண்டிகை, நற்கருணை ஆராதனை, நோ்ச்சை, பொருள் படைப்பு ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. சோனகன்விளை சேகர தலைவா் டேனியல் ஞானப்பிரகாசம் தேவசெய்தி அளித்தாா். ஓய்வுபெற்ற குருமாா்கள் செல்வராஜ், பொன்னுசாமி, சபை மக்கள் திரளாகப் பங்கேற்றனா். மாலையில் ஞானஸ்நான ஆராதனை, இரவில் அசன ஆயத்த ஜெபப் பாடல் பவனி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (மே 23) அதிகாலையில் அசன பணி ஆயத்த ஆராதனை, மாலையில் அசன விருந்து நடைபெற்றது. சேகரத் தலைவா் நவராஜ் தலைமையில் பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலயப் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் ஜெபித்து அசன விருந்தைத் தொடக்கிவைத்தாா்.
ஏற்பாடுகளை பிரகாசபுரம் சேகரத் தலைவா் நவராஜ், சபை ஊழியா் ஸ்டான்லி, திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள், ஆலயப் பணியாளா் டிக்சன், ஆலய பரிபாலனக் குழுவினா், சபை மக்கள் செய்திருந்தனா்.