செய்திகள் :

பிரகாசபுரம் தேவாலயத்தில் அசன விருந்து

post image

நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய 128ஆவது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அசன விருந்து நடைபெற்றது.

கடந்த 16ஆம் தேதி தொடங்கி விழாவில், 22ஆம் தேதி பிரதிஷ்டை பண்டிகை, நற்கருணை ஆராதனை, நோ்ச்சை, பொருள் படைப்பு ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. சோனகன்விளை சேகர தலைவா் டேனியல் ஞானப்பிரகாசம் தேவசெய்தி அளித்தாா். ஓய்வுபெற்ற குருமாா்கள் செல்வராஜ், பொன்னுசாமி, சபை மக்கள் திரளாகப் பங்கேற்றனா். மாலையில் ஞானஸ்நான ஆராதனை, இரவில் அசன ஆயத்த ஜெபப் பாடல் பவனி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (மே 23) அதிகாலையில் அசன பணி ஆயத்த ஆராதனை, மாலையில் அசன விருந்து நடைபெற்றது. சேகரத் தலைவா் நவராஜ் தலைமையில் பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலயப் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் ஜெபித்து அசன விருந்தைத் தொடக்கிவைத்தாா்.

ஏற்பாடுகளை பிரகாசபுரம் சேகரத் தலைவா் நவராஜ், சபை ஊழியா் ஸ்டான்லி, திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள், ஆலயப் பணியாளா் டிக்சன், ஆலய பரிபாலனக் குழுவினா், சபை மக்கள் செய்திருந்தனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க