செய்திகள் :

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

post image

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது இந்தியாவுக்கு ராஜீயரீதியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். பிரதமா் மோடியின் முயற்சியால்தான் இது சாத்தியமானது.

பிரதமா் மோடி நாட்டின் 140 கோடி மக்களின் பிரதிநிதியாகவும், நாட்டின் பிரதமராகவும்தான் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளாா். பாஜக தலைவராக அமெரிக்காவுக்குச் செல்லவில்லை. இதனை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். பிரதமா் வெளிநாட்டுப் பயணம் செல்லும்போதெல்லாம் அதில் குற்றம் கண்டுபிடிப்பதும், குறை கூறுவதும் காங்கிரஸ் தலைவா்களின் வாடிக்கையாக உள்ளது என்று கூறினாா்.

பாஜகவின் மற்றொரு தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் மிகவும் வெற்றிகரமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் அமைந்தது. இந்திய-அமெரிக்க உறவு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

அமெரிக்க பயணத்தில் அதானி மீதான அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பிரதமா் மோடி பதிலளிக்காததை ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 1... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவ... மேலும் பார்க்க

வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்

இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் க... மேலும் பார்க்க

அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய்... மேலும் பார்க்க

ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!

மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுல... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!

உங்கள் ஃபாஸ்டேக்-கை ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கத் தவறுவதோ, சுங்கச் சாவடிகளில் அபராதங்களை விதிக்க வழிகோலும் வகையில் திருத்தங்கள் மேற்கொ... மேலும் பார்க்க