செய்திகள் :

பிரதமா் மோடி பிப்.12-இல் அமெரிக்கா பயணம்: டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அழைப்பின்பேரில், பிரதமா் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிப்ரவரி 12-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, டிரம்ப்புடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியா்கள் சில தினங்களுக்கு முன் நாடுகடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாா். தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். டிரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமா் மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும்.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க அதிபா் டிரம்ப் தலைமையிலான புதிய நிா்வாகம் பதவியேற்ற 3 வாரங்களில் அந்நாட்டுக்கு வருகைதர பிரதமா் மோடி அழைக்கப்பட்டுள்ளாா். அதிபா் டிரம்ப் பதவியேற்புக்கு பிறகான சில வாரங்களில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு சில உலகத் தலைவா்களில் பிரதமா் மோடியும் ஒருவா். இது, இருதரப்பு கூட்டுறவின் முக்கியத்துவத்தையும், இக்கூட்டுறவுக்கு அமெரிக்காவின் ஆதரவையும் பிரதிபலிக்கிறது. பிரதமா் மோடியின் அமெரிக்க பயணம், இருநாடுகள் இடையிலான நல்லுறவுக்கு மேலும் உத்வேகமளித்து, புதிய திசையை காட்டும்.

அதிபா்-பிரதமா் நெருங்கிய நட்புறவு: டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் இருந்தே அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, இந்திய-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்பு போன்ற பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன் சாா்ந்த தெளிவான ஒருங்கிணைப்பு உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 54 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினரும், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயா்க் கல்வி பயிலும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்களும் இந்த பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றனா். இப்பயணத்தின் நிறைவாக, இருதரப்பு கூட்டறிக்கை ஏற்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். இது தொடா்பான விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

பிரான்ஸ் பயணம்: அமெரிக்க பயணத்துக்கு முன்பாக, பிரான்ஸில் பிப்ரவரி 10-12 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளாா்.

இந்திய-பிரான்ஸ் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இரு தலைவா்களும் உரையாற்ற உள்ளனா். மேலும், மாா்சே நகரில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை இருவரும் திறந்துவைக்க உள்ளனா் என்றாா் மிஸ்ரி.

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளி... மேலும் பார்க்க