'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
பிரத்தியங்கார தேவிக்கு மிளகாய் சண்டியாகம்
அரியலூா் அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலுள்ள பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத அமாவாசயை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தா்கள், தங்கள் கொண்டு வந்துள்ள புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நோ்த்திகடனை செலுத்தினா்.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.