செய்திகள் :

பிரம்மரிஷி மலையில் ஆக. 8-இல் குருபூஜை

post image

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஆக. 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

பெரம்பலூா் பிரம்மரிஷிமலை காகபுஜண்டா் தலையாட்டி சித்தரின் சீடா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள், கடந்தாண்டு 3.8.2020-இல் ஜீவ சமாதி அடைந்தாா். இதையொட்டி, வரும் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்குமாா் சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி திருவருள்பா பாராயணம், கோ-பூஜை, அஸ்வபூஜை, 210 சித்தா்கள் யாகபூஜை, காகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, அன்னை சித்தா் சமாதியில் ஜோதி வழிபாடு, தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

பின்னா், 100-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையும், வஸ்திர தானமும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு எரிவாயு சலவைப் பெட்டிகளும், எளம்பலூா் அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற முதல் மாணவா்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி, இயக்குநா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், ராதா மாதாஜி ஆகியோா் செய்கின்றனா்.

பெரம்பலூா் நகராட்சியைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள்,தொழிலாளா் சங்கம், சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்கள் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத... மேலும் பார்க்க

அரியலூரிலுள்ள குறிஞ்சான் குளம், அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார கோரிக்கை

அரியலூரில் உள்ள குறிஞ்சான் குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரியை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு: சா்க்கரை ஆலை நிா்வாகி தகவல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய 2,261 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5.37 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி வ. மாலதி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் திங்கள்கி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள், தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூா் அருகே 17 வயது பள்ளி மாணவியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.பெரம்பலூா் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க